Friday, April 07, 2006

கார்த்திக் முத்துராமலிங்கத்தேவரின் வாரிசா?

திரைப்பட நடிகர் கார்த்திக் சில நாட்களுக்கு முன்னர் அவர் மீதான பண மோசடி வழக்குகளுக்காக நீதிமன்றம் சென்று கொண்டிருந்தார். அது போன்ற வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்க, வழக்கு போட்டவர்களை மிரட்ட அவருக்கு ஒரு அரசியல் கட்சியுன் தயவு தேவைப்பட்ட நேரத்தில் அவர் முதல்வர் ஜெயலலிதாவைச்சந்தித்து அதிமுக- வில் சேர முயன்றார். அது சீக்கிரம் நடக்காமல் போகவே, ஒரு அறிமுகமான நடிகர் மற்றும் ஒரு சாதியை சார்ந்தவர் என்கிற ஒரு அடையாளத்துடன் "சரணாலயம்" என்ற ஒரு சாதீய அமைப்பை உருவாக்கி அதன் மூலம் அரசியல் கட்சிகளின் பார்வை தன் மீது படர முயற்சி செய்தார். அவர் எதிர்பார்த்தது போலவே தமிழக அரசியலில் அவருக்கு ஒரு இடம் கிடைத்தது. இன்று அவர் பாரம்பரியம் மிக்க "பாரவர்டு பிளாக்" கட்சியின் மாநில தலைவர்.

கார்த்திக்கைப்ப்ற்றி திரையுலகிற்கு மட்டும் அல்ல தமிழகத்ததிற்கே நன்றாக தெரியும் அவர் ஒழுங்கீனத்தின் மொத்த உருவம் என்று. பல நடிகைகளுடன் தவறான உறவு வைத்திருந்தவர். "நடிகையின் கதை"-யின் நாயகனாகவே அவர் இருந்தார். ஏமாற்றிவிட்டு கைவிட்டுவிடலாம் என்றிருந்த ஒருவரை அவர் சார்ந்த மலைவாழ் மக்களின் மிரட்டலுக்காக திருமணம் செய்து கொண்டவர். தன் மனைவியின் தங்கையைகூட விட்டுவைக்காத அவரை தன் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளாமல் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்தவரும், நேதாஜி அவர்களுடன் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவரும், சிறந்த சொற்பொழிவாளருமான பசும்பொன் முத்துராமலிங்கத்தேவருடன் ஒப்பிடுப்பேசுவதும், அவர் பாதுகாத்த கட்சியை இனிமேல் இவர்தான் காக்கப்போகிரார் என்கிற ரீதியில் பேசுவதும் அந்த மாகனை இழிவுபடுதும் செயலாகும்.

அம்பேத்கார், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், காமராஜர் மற்றும் சிதம்பரனார் போன்றவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன் நாட்டிற்கும், தன் மக்களுக்கும் சாதி மதம் பாராது உழைத்தவர்கள். அத்தகைய மகான்களை ஏதோ ஒரு சாதிச்சங்கத்தலைவர் போல ஒரு குறுகிய வட்டதில் அடைத்து அதன் மூலம் அரசியல் லாபமடையப்பார்க்கும் ஒரு சில சமூக விரோத சக்திகளை நம் மக்கள் அடையாளம் கண்டு அப்புறப்படுத்தவேண்டும். அதற்கு இந்த தேர்தல்தான் சரியான தருணம்.

இந்த தேர்தலில் மக்கள் வெரும் குறுகியகால சந்தோசங்களுக்காக தங்கள் விலைமதிப்பில்லாத வாக்குகளை விற்றுவிடாமல் நாட்டின் எதிர்காலத்தையும், நம் மக்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு திறமையுள்ள, தொலைநோக்கு பார்வையுள்ள குறிப்பாக பொது நலனில் அக்கறையுள்ள வேட்பாளர்களை ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்கவேண்டும்.

0 Comments:

Post a Comment

<< Home